Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பதின்ம மேல்நிலைப்பள்ளியில் நவம்பர் 14, 2023 குழந்தைகள் தினவிழா, பாரம்பரிய உணவுத் திருவிழா மற்றும் கூட்டாஞ்சோறு சமைத்தல் கொண்டாட்டம் உள்ளிட்டவை நடைபெற்றது.
இதில் குழந்தைகளை நன்னெறிப்படுத்தும் வகையிலும் ஆளுமைகளின் நற்சிந்தனைகளை ஊட்டும் விதமாகவும், தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, உணவுப் பழக்கவழக்கம் மற்றும் ஒற்றுமை உணர்வை வளர்க்கும் வகையில் உணவுத் திருவிழாவும், கூட்டாஞ்சோறு சமைத்து உண்ணுதல் போன்ற விழாக்கள் கொண்டாடப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் கூட்டாஞ்சோறு சமைப்பதற்கு குழந்தைகளே தேவையான உணவுப்பொருட்களைக் கொண்டு வந்து,
அவர்களே சமைத்து, சேர்ந்து உண்டு மகிழ்ந்தனர்.
இவ்விழாவில் குழந்தைகளின் நற்செயல்பாடுகளுக்காக பரிசுகள் வழங்கப்பட்டன.